News September 24, 2025
வேலூர்: பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்!

அரக்கோணம், தண்டலம் அருகே வினோத், தனது மனைவி நிவேதாவுடன் ஐ.டி.யில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உண்டு, இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிவேதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. நிவேதாவின் மரணத்திற்கு வரதச்சனை தான் கரணம் என்று உடலை வாங்க மறுத்து நிவேதாவின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 24, 2025
வேலூர்: வங்கி அதிகாரி ஆக விருப்பமா? ரூ.80,000 சம்பளம்!

வேலூர் மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், இங்கு<
News September 24, 2025
வேலூர்: 13 வயது சிறுமிக்கு காதல் தொல்லை!

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த சாம் திவாகர் (23), தொழிலாளி. இவர் வேலூர் நகரை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த மாதம் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சாம் திவாகர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று சென்னையில் கைது செய்தனர்.
News September 24, 2025
வேலூர்: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.