News December 22, 2025

வேலூர்: பெண்களை கட்டையால் தாக்கி செயின் பறிப்பு!

image

பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகம்மாள்( 65), பிலோமினா(54). நேற்று(டிச.21) அதிகாலை 2 பேரும் அதே பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர் 2 பேரையும் கட்டையால் தாக்கி முருகம்மாள் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை பிடித்த பள்ளிகொண்டா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

வேலூர் மக்களுக்கு SP கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து!

image

உலகம் முழுவதும் இன்று (டிச-25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

வேலூர் : புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

வேலூர்: 12th போதும் – ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

image

வேலூர் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!