News March 19, 2024
வேலூர்: பிரபல ரவுடி அதிரடி கைது

வேலூர் வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (36), கூலித் தொழிலாளி. இவர் நேற்று ரங்காபுரம் வழியாக வேலைக்கு நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிரபல ரவுடியான பிரபு சத்யராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக சத்யராஜ் சத்துவாச்சாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை இன்று (மார்ச் 19) கைது செய்தனர்.
Similar News
News August 8, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் நாளை அணைக்கட்டு வட்டாரத்திற்கு நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணியம்பாடி வட்டாடத்திற்கு வல்லம் குமரன் மஹால், கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு கீழ் ஆலத்தூர் ஜி.வி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்
News August 8, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.7) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News August 8, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கலெக்டர் தகவல்

“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாம் வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி வேலூர் மாவட்டம், ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.