News December 13, 2025
வேலூர்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 17, 2025
வேலூர் வருகிறார் நயினார் நாகேந்திரன்!

வேலூர்:பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(டிச.17) மண்டி தெருவில் மாலை 6 மணிக்கு நடக்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்கிறார். உடன் மத்திய அமைச்சர் முருகன், மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேசுகின்றனர். அங்கிருந்து அவர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
News December 17, 2025
வேலூர் வருகிறார் ஜனாதிபதி!

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூருக்கு வருகை தருகிறார். திருப்பதியில் இருந்து காலை 11 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு அவர் வர உள்ளார். இந்த வருகையை முன்னிட்டு ஸ்ரீபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
News December 17, 2025
வேலூர்: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

வேலூர் மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


