News March 27, 2024
வேலூர் தேர்தல் பொது பார்வையாளர் வருகை

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபேஷ் குமார் அவர்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 27) சுற்றுலா மாளிகையில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 4, 2025
ரூ.11.80கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கிவைத்த து.முதல்வர்

வேலூரில் இன்று (நவ.04) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.11.80 கோடி மதிப்பிலான 31 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ17.91 கோடி மதிப்பிலான 15 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபுலட்சுமி, MP கதிர் ஆனந்த், MLA கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன் மேயர் சுஜாதா பலர் கலந்து கொண்டனர்.
News November 4, 2025
சிடி ஸ்கேன் மையத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர்

வேலூர், ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.04) திறந்து வைத்தார். இந்த புதிய வசதி வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் பயன்பெறட்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். இதில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த் MLA கார்த்திகேயன் நந்தகுமார் உடன் இருந்தனர்.
News November 4, 2025
வேலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

வேலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 ) 2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 ) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 ) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 ) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


