News February 2, 2026

வேலூர்: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

image

பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரின் மூத்த மகள் சுவாதி (17) அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று (பிப்.1) மதியம் ஜோதி தனது மகள் சுவாதியை வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கிறாயே எனக்கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

வேலூர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

வேலூர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க..!

News February 6, 2026

வேலூரில் அதிரடி மாற்றம்!

image

வேலூரில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தீனதயாளன், வேலூர் தாலுகா துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் மஞ்சுநாதன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் பெற்று உள்ளனர். மேலும் அங்கு பணியாற்றிய நதியா, வேலூர் நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலக நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

News February 6, 2026

வேலூர்: சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் அதிரடி!

image

பரணாம்பட்டு -வீ.கோட்டா சாலையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு-கோட்டையூர் வழியாக 2 பேர் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தனர். இதையறிந்த போலீசார் பைக்கில் 1 கி.மீ தூரத்துக்கு சினிமா பாணியில் துரத்தி சென்றனர். இதையறிந்த ஆசாமிகள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகள் போட்டுவிட்டு தப்பினர். போலீசார் தற்போது தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!