News December 24, 2025
வேலூர்: துப்பாக்கியை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய 3 பேர்!

வேலூர்: அரியூர் போலீசார் நேற்று ஊசூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முந்திரி தோப்பில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பைக்கை சோதனை செய்த போது நாட்டு துப்பாக்கி இருந்தது. தொடர்ந்து நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
வேலூர்: பால் வியாபாரி பைக் விபத்தில் பலி!

கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரம் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். பால் வியாபாரியான இவர், காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் குடியாத்தம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த பைக் மகாலிங்கத்தின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
வேலூர்: லாரி மோதி மூதாட்டி பலி!

திருவலம் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று மாதாண்டகுப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கங்கையம்மாள் (70) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 27, 2025
வேலூர்: பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு!

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்து (24). இவர் கடந்த ஆண்டு 10 வயது சிறுமியை ஏரிக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த புகாரில் குடியாத்தம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர். வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று முத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


