News April 4, 2024
வேலூர்: தமிழக, ஆந்திர போலீசார் ஆலோசனை

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் இன்று ( ஏப்ரல் 4) ஆந்திரா, தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், கடத்துவதை தடுப்பது பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Similar News
News February 5, 2026
வேலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

வேலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
வேலூர்: “அம்மா நான் சாக போறேன்…” மாணவன் தற்கொலை!

ரெட்டியார்பல்லியை சேர்ந்த ஜீவநேசன், குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் யோகநேசன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் யோகநேசன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் “படி படியென தொடர்ந்து வற்புறுத்துவதால்” தற்கொலை செய்து கொண்டதாக எழுதி இருந்தது. இதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 5, 2026
வேலூர்: 7 மாத குழந்தை திடீர் சாவு; கதறும் பெற்றோர்!

கீழ்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதி பிரசாந்த் (32), மோகனா.இவர்களது 7 மாத பெண் குழந்தை மிதுலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.4) காலை குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மோகனா தூக்கியபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது.


