News April 12, 2024
வேலூர் சிறையில் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,100-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விசேஷ நாள்களில் சிறப்பு உணவுகள் வழங்கப்படும். அதன்படி நேற்று (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகையையொட்டி கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதனை கைதிகள் பலர் மகிழ்ச்சியுடன் உண்டனர் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 21, 2025
வேலூர்:சாலை விபத்தில் வாலிபர் பலி!

ஒடுகத்தூர் அருகே உள்ள சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த முனிசாமி மகன் சுரேஷ்குமார் ( 23), ஒடுகத்தூர் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு பைக்கில் சென்றார். ஒடுகத்தூர் சென்று மீண்டும் வீடு திரும்பியபோது அரிமலை அருகே பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
வேலூர்: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 21, 2025
வேலூர் மாவட்ட மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை<


