News October 22, 2025

வேலூர் சரகத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

image

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தினர். அதில் 4 மாவட்டங்களில் மொத்தம் 326 ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர். அதில் 24 பஸ்கள் வரி செலுத்தாமல் இயக்கியது தெரியவந்தது. அந்த பஸ்களுக்கு ரூ. 16,05,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Similar News

News October 22, 2025

வேலூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

வேலூரில் 300 ஏக்கர் சாமை பயிர் சேதம்

image

வேலூர்: ஒடுகத்தூர் பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் ஒடுகத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள தீர்த்தம், கொட்டாவூர், கெங்கசாணிகுப்பம், சேர்பாடி, வண்ணாந்தாங்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த சாமை பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 22, 2025

வேலூரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

image

வேலூர்: குடியாத்தம் அடுத்த கூடநகரம் ஏரி 174 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 26 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு கூடநகரம் ஏரி நிரம்பி வழிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்று மகிழ்ந்தனர். மேலும் நீர்வளத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

error: Content is protected !!