News November 16, 2025

வேலூர்: சந்தன மர கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!

image

வேலூர்: முத்துகுமரன் மலை அருகே, அடர்ந்த வனப்பகுதியில் உயர் ரக சந்தன மரங்கள் உள்ளன. இதனை, வனத்துறையினர் இரவும், பகலுமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க நேற்று (நவ.16) முதல் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

வேலூர்: பெண்களுக்கு சூப்பர் வேலை!

image

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ‘Universal Elevators’ நிறுவனத்தில் ‘Office Executive’ பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 40 வயதிற்குட்பட்ட அனுபவமுள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் அனுபவத்திக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

வேலூரில் துணிகரம் – 45 பவுன் நகை வீடு புகுந்து கொள்ளை!

image

வேலூர்: காட்பாடி திருநகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதை அறிந்த ராஜ்குமார் அதிர்ச்சியடைந்து நேற்று (நவ.15) விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!