News February 9, 2026
வேலூர்: கொளுந்து விட்டு எறிந்து விபத்து!

வேலூர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் அதே பகுதியில் ஊதுபத்தி கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.8) அதிகாலை திடீரென குச்சிகள் வைத்திருந்த மூட்டைகள் தீப்பற்றி எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து செந்தில்குமார், முன்விரோதம் காரணமாக தொழிற்சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
Similar News
News February 9, 2026
வேலூரில் EB பில் எகுறுதா..?

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
வேலூர்: கடைக்கு சென்றவருக்கு அடி உதை!

சித்தூர்கேடை சேர்ந்த அக்பர் பாஷா கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார். யதார்த்தமாக அக்பர் வீட்டுக்கு போன் செய்வதை, சண்டைக்கு ஆள் சேர்கிறார் என தவறாக நினைத்த இஸ்மாயில், அக்பரை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார்.இதில் காயமடைந்த அக்பர்பாஷா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் இஸ்மாயில், ஆஜாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
News February 9, 2026
வேலூர்: பீர் பாட்டிலால் குத்தி கொலை; திடுக்கிடும் பின்னணி!

பள்ளிக்குப்பத்தை சேர்ந்த திவாகர் (25). கடந்த 31-ந் தேதி ஏரிக்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி காட்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், திவாகர் ஏற்கனவே வெங்கடேசன் (2022) என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளது தெறித்தது. இந்த வழக்கில் ராகுல் (24) ஹரிஷ்குமார் (24), விஜய் ஆகியோரை விசாரித்ததில் முன் விரோதம் காரணமாக திவாகரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.


