News September 7, 2025

வேலூர்: குழந்தை பாக்கியம் பெற இந்த கோயிலுக்கு போங்க!

image

வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 8, 2025

வேலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

வேலூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

வேலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 7, 2025

வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!