News January 27, 2026
வேலூர்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News January 30, 2026
வேலூர்: துரத்தி துரத்தி கடித்து குதறிய வெறி நாய்!

போ்ணாம்பட்டு அருகே குப்பைமேடு பகுதியில் நேற்று (ஜன.29) முஹம்மத் பஷீா்(14), உம்மேஹனி(5) , ஷாயிரா(4) ஆகிய 3 சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 3 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் கடித்து குதறியது. நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமத்திதனர்.
News January 30, 2026
வேலூர்: சிறுமிக்கு மிரட்டல்; பாய்ந்த போக்சோ!

லத்தேரியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதை அறிந்த சிறுமி, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து காட்பாடி போலீசார் போக்சோ வழக்கில் சசிகுமாரை கைது செய்தனர்.
News January 30, 2026
வேலூர்: காதலி கண் முன்னே பற்றி எரிந்த காதலன்!

ஜாப்ராபேட்டையை சேர்ந்த வாலிபர் (25) அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.29) இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீரென தீக்குளித்தார். தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் அவர் அலறியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


