News January 6, 2026
வேலூர்: குடியிருப்பில் புகுந்த பாம்புகள் பரபரப்பு!

வேலூரில் ஒரே நாளில் தீயணைப்பு துறையால் 5 பாம்புகள் வெவேறு இடங்களில் பிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருமுகையில் ஒரு வீட்டில் சாரைப்பாம்பு, கிரீன்சர்க்கிள் பகுதியில் கொம்பேரி மூக்கன் பாம்பு. பாகாயத்தில் வீட்டில் நல்ல பாம்பு, அரியூர் பகுதியில் சாரைப்பாம்பு, ஓல்டு டவுன் பகுதியில் மற்றோரு சாரைப்பாம்பு என் வீடுகளுக்குள் புகுந்த 5 பாம்புகளை மீட்டு அதிகாரிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 8, 2026
வேலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

வேலூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!
News February 8, 2026
வேலூர் வருகிறார் விஜய்!

வேலூர் அருகே உள்ள அகரம்சேரியில் வரும் பிப்.23ஆம் தேதி த.வெ.க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற காவல்துறை சார்பில் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அகரம்சேரியில் 25 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு த.வெ.க பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
வேலூர்: தலையோடு பொருத்தி சோதனை; காத்திருந்த அதிர்ச்சி!

பேரணாம்பட்டு, சாத்கர் மலையில் 2 மாதங்களுக்கு முன்பு 3 காட்டுயானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதில் 1 யானையின் தந்தங்கள் உருவப்பட்டு இருந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திரா அருகே சித்தூரில் மறைத்து வைக்கப்பட்ட 2 யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். இதில் சந்திரபாபு (47) பி.சந்திரபாபு (42) ஆகியாரை கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


