News April 28, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News April 28, 2025
வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்து கொள்ள வசதியாக மே 15 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். அதற்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
News April 28, 2025
வேலூர் மக்களை கவரும் பாலமதி மலை பயணம்

Weekendல் ஜாலியாக பைக் ரைடு அல்லது ட்ரெக்கிங் போக சிறந்த இடமாக பாலமதி மலை உள்ளது. மேகங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலையில் செம்மீசைச் சின்னான், பச்சைப் பஞ்சுருட்டான,மைனா, வெள்ளை-தொண்டை மீன்கொத்தி,பனங்காடை, மற்றும் ரெட்டைவால் குருவி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. பக்கத்துலயே எங்கயாச்சும் ரைடு போகணும் அதும் பட்ஜெட்ல போகணும்னு சொல்ற உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு கூப்பிடுங்க
News April 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.