News April 27, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News February 12, 2026
ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
வேலூர் சிறையில் 45 பேர் தேர்வுக்கு தயார்!

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் இந்த ஆண்டு 15 சிறைவாசிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை ஆண்கள் சிறையில் 12 பேர், பெண்கள் சிறையில் 8 பேர் என மொத்தம் 45 கைதிகள் எழுத உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மத்திய சிறையில் தேர்வு மையம் அமைந்துள்ளது.


