News September 23, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (செப்ட. 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*
Similar News
News September 24, 2025
வேலூர்: பெண் சாவில் சந்தேகம் உறவினர்கள் போராட்டம்!

அரக்கோணம், தண்டலம் அருகே வினோத், தனது மனைவி நிவேதாவுடன் ஐ.டி.யில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உண்டு, இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிவேதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. நிவேதாவின் மரணத்திற்கு வரதச்சனை தான் கரணம் என்று உடலை வாங்க மறுத்து நிவேதாவின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
News September 24, 2025
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி செப்டம்பர் 23ல் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் முகாமை வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சி.எஸ்.ஹாலில் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
News September 23, 2025
அதிமுக ஐடி விங் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாநகர மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று வேலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். உடன் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.