News January 21, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 21, 2026
வேலூரில் கோர விபத்து!

பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
News February 21, 2026
வேலூர்: நகை பறிப்பில் ஈடுபட்ட டெல்லி வாலிபர் கைது

வேலூர் அருகே ரமணி (47), ஷாலினி (39) ஆகிய இரு பெண்களிடம் மொபட்டில் சென்றபோது மர்ம நபர்கள் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய டெல்லியைச் சேர்ந்த சோனுகுமார் (32) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
News February 21, 2026
வேலூரில் அதிரடி – 21 கிலோ கஞ்சா கடத்தல் முறியடிப்பு!

திருப்பதியில் இருந்து கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக அமர்ந்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆசிம் (26) அருகில் இருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 21 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் ஆசிமை கைது செய்தனர்.


