News January 1, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.31) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News January 1, 2026

வேலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு வலை!

image

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒ.ராஜாபாளையம்-பின்னத்துரை செல்லும் வழியில் வனப்பகுதியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 1, 2026

குடியாத்தம்: பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடர்கள்!

image

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 3 பேர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பொருட்களை திருட முயன்றனர். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் 3 பேரையும் பிடித்து குடியாத்தம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (20), சஞ்சய் (19), ராமஜெயம் (17) என தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

News January 1, 2026

வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபர்!

image

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் நேற்று (டிச.31) வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சக்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!