News September 6, 2025
வேலூர் காவலர் தினத்தை முன்னிட்டு எஸ்பி தகவல்

காவலர் தினத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 06) வேலூர் காவலர் கவாத்து மைதானத்தில் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், தொடர்ந்து காலை 10 மணியளவில் காவலர் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாமும் மாலை 5 மணியளவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு ரோந்து :

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (05.09.2025) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர், காட்பாடி, சாயர்பேட்டை, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு ரோந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
News September 5, 2025
வேலூர்: 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
ஓணம் தின வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்பி

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று (செப்ட-05) உலகெங்கும் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அன்பை விதைத்து வளமையை அறுவடை செய்து ஒன்றிணைந்து இத்திருஓணத்தை திருநாளை கொண்டாடிடுவோம். இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் என தனது சமூக வலைதள பதிவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.