News November 19, 2025
வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News March 7, 2026
வேலூரில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நேற்று (மார்ச் 06) சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
வேலூர்: லாரி மோதி கொடூர பலி!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஒருவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், உயிரிழந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வேலூரைச் சேர்ந்த நித்யானந்தம் என்பது தெரியவந்தது.
News March 7, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


