News November 16, 2025

வேலூர்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!

image

வேலூர்: அணைக்கட்டு அடுத்த பீஞ்சைமந்தை, அல்லேரி, ஜார்தான் கொள்ளை, பட்டி குடிசை ஆகிய மலைப்பகுதிகளில் திருட்டு வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று (நவ. 15) அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனைகள் முறையான ஆவணங்கள் இல்லாத 24 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

வேலூரில் துணிகரம் – 45 பவுன் நகை வீடு புகுந்து கொள்ளை!

image

வேலூர்: காட்பாடி திருநகர் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 45 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதை அறிந்த ராஜ்குமார் அதிர்ச்சியடைந்து நேற்று (நவ.15) விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

News November 16, 2025

வேலூர்: சந்தன மர கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!

image

வேலூர்: முத்துகுமரன் மலை அருகே, அடர்ந்த வனப்பகுதியில் உயர் ரக சந்தன மரங்கள் உள்ளன. இதனை, வனத்துறையினர் இரவும், பகலுமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க நேற்று (நவ.16) முதல் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 16, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*

error: Content is protected !!