News December 31, 2025
வேலூர்: ஒரே ஆண்டில் ரூ.19 கோடி மோசடி!

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 3,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 519 மனுக்கள் பணம் இழப்பு இல்லாத மனுக்கள் ஆகும். மீதமுள்ள 2,631 பேர் ரூ.19 கோடியே 41 லட்சத்தை இழந்துள்ளனர். இதில் பல வங்கி கணக்குகளில் உள்ள 4 கோடியே 18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
வேலூர்: துணை ஜனாதிபதியை வரவேற்ற கலெக்டர்

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் .சி. பி. இராதாகிருஷ்ணனை, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News January 3, 2026
வேலூர்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<
News January 3, 2026
வேலூர்: நாட்டுக்கோழிகள் வளர்க்க 50% மானியம்!

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


