News January 9, 2026
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் நியமனம்

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் அரியூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடம் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 4, 2026
வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

வேலூரில் தொரப்பாடி, வடுகந்தாங்கல், சத்துவாச்சாரி, கார்ணாம்பட்டு துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, அரியூர், தொரப்பாடி சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும்.
News February 4, 2026
வேலூரில் நள்ளிரவில் பயங்கரம்!

குடியாத்தத்தில் இருந்து மினிவேன் ஒன்று நேற்று இரவு (பிப்.3) ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்துல்லாபுரம் அருகே சாலையை பெண் ஒருவர் கடக்க முயன்றார். இதை பார்த்த டிரைவர் பிரேக் போட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சென்டர் மீடியனில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் அப்பெண் சிறு காயங்களுடன் தப்பினார். பின்னர் வேன் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
News February 4, 2026
வேலூர்: அடிதடியில் முடிந்த வீண் தகராறு!

கழிஞ்சூரை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் பாலுநகர் பகுதியில் பெட்ரோல் வாங்குவதற்காக சாலையோரம் காலி பாட்டில் கிடக்கிறதா என பார்த்துக்கொண்டே பைக்கில் மெதுவாக சென்றார். அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ் (32) ஓரமாக செல் அல்லது வேகமாக செல் என தினேஷை ஆபாசமாக திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தினேஷ் விக்னேஷை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


