News May 15, 2024

வேலூர்: உயர் கல்வியில் வழிகாட்டும் நிகழ்வு 

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இன்று விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் மாலதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News July 4, 2025

வேலூர் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<> இந்த லிங்க்<<>> மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (0416-2232999) மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம். இந்த எண்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க. <<16937852>>தொடர்ச்சி<<>>

News July 4, 2025

வேலூரில் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (2/2)

image

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.

News July 4, 2025

வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

image

வேலூர் மாநகராட்சியில் உள்ள தெருவிளக்கு பாரமரிப்பு பணிகள், குடிநீர் வினியோக பணிகள், சாக்கடை பராமரிப்பு பணிகள் மற்றும் பொதுசுகாதார பணிகள், சம்பந்தமான புகார்கள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சிக்கு தெரிவிப்பதற்கு 92800-97911 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலமாகவும், மேலும் iccc.vellore@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!