News October 26, 2025
வேலூர்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<
Similar News
News October 26, 2025
வேலூர்: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

வேலூர் மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News October 26, 2025
குறைந்த விலையில் வாகனம் வாங்க வாய்ப்பு

வேலூர் நகரில் போலீசார் பல்வேறு குற்றச்செயல்களில் பறிமுதல் செய்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொதுமக்களுக்கு ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் அக்டோபர் 30ம் தேதி காலை 10 மணிக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் தேவையான அடையாள ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.
News October 26, 2025
வேலூர்: மத்திய அமைச்சர் வருகையால் சலசலப்பு

வேலூரில், நேற்று (அக்.25) விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் காலை வருவதாக தெரிவித்தனர். ஆனால், அவர் தாமதமாக வந்த நிலையில், வந்திருந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கப்படவில்லை. பின் விவசாயி ஒருவர், கோபத்துடன் ‘நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது தமிழக அரசு. அவர்களிடம் கேட்காமல், டில்லியில் இருந்து வரும் மத்திய அமைச்சரிடம் சாப்பாடு கேட்கலாமா? எனக் சுட்டிக்காட்டினார்.


