News February 10, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய மாணவன் !

image

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த நர்சிங் மாணவர் அரவிந்த் (22). இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.9) அரவிந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

வேலூர் போலீசார் அதிரடி!

image

பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி சோதனை சாவடியில் நேற்று (பிப்.9) பேரணாம்பட்டு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆந்திர மாநிலம் வீ.கோட்டாவில் இருந்து வந்த பைக்கில் சோதனை செய்தனர். அப்போது பைக்கில் இருந்த பைகளை திறந்து பார்த்தபோது, 6 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருட்களை கடத்தி வந்த ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

News February 10, 2026

வேலூரில் துணிகர சம்பவம்!

image

வேலூர் வெங்கடாபுரத்தை சேர்ந்த லேப்டெக்னீஷியன் பிலீப் ரிச்சார்ட் (49). நேற்று இவரது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் எஸ்.பி சிவராமன் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!