News February 19, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 19, 2026

வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

image

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News February 19, 2026

வேலூரில் அதிகாரிகள் அதிரடி!

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 19, 2026

வேலூரில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

image

ஒடுகத்தூர் அகரம் பகுதியை இரு தரப்பினர் இடையே முன்பகை காரணமாக நேற்று (பிப்.18) காலை பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை மீண்டும் ஏற்பட்ட தகராறில் 1 பெண் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச் செல்வன் படுகாயமடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!