News February 8, 2026

வேலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

Similar News

News February 13, 2026

வேலூரில் தூக்கில் தொங்கிய வாலிபர்!

image

கன்னிகாபுரத்தை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் ராம் பிரகாஷ் (25). இவர் 2022-ல் ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் இவர் போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் பிரகாஷுக்கு அவரது நண்பர் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரகாஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

வேலூரில் துடிதுடித்து பலி!

image

கீழ்வடுகன்குட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35). இவர் நேற்று மாலை தனது மாமனார் கோபியுடன் (62) பைக்கில் லத்தேரிக்கு சென்றனர். அப்போது பைக் நிலை தடுமாறி புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

ஓடும் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம்

image

அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலை பகுதி முத்தனூர் கிராமத்தை சேந்தவர் அப்பாவு, கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா, நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலியில் நேற்று துடித்த பிரியாவை வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் வேலூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!