News January 31, 2026
வேலூர்: ஆத்திரத்தில் வாலிபர்கள் வெறிச்செயல்!

சத்துவாச்சாரியில் கடந்த 28-ந் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (26), சின்னா (30), ராகவன் (28), கோகுல் (25) கலந்து கொண்டனர். உணவு அருந்த சென்ற போது உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இக்கும்பல் அங்கிருந்த உணவு பரிமாறிய முகமது அலியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
வேலூர்: மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி!

வேலூர், விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (63). இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 1, 2026
வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (0416-2220893) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.


