News February 25, 2026
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News February 25, 2026
வேலூர் மாவட்டத்தில் 82 மையங்கள் தயார்!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7,134 மாணவர்கள், 8,522 மாணவிகள் என மொத்தம் 15,656 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 25, 2026
வேலூர்: மர்மப்பொருள் கொடுத்து நகை அபேஸ்!

வேப்பங்குப்பம் அருகே குறவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நந்தினி (35) என்பவரின் வீட்டுக்கு நேற்று 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவரிடம் நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறியுள்ளனர். அவர் மறுத்த நிலையில், அவரிடம் ஒரு மர்மப் பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 25, 2026
வேலூர்: மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!

காட்பாடியை சேர்ந்த நடராஜ் (69), பார்வை குறைபாடுடைய இவர் நேற்று சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க ஒரு வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உதவி செய்வது போல் நடித்து போலி ஏடிஎம் கார்டை நடராஜிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். வாலிபர் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் ரூ.20,800 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


