News October 18, 2025
வேலூர் அருகே 1,330 வெளிமாநில மது பறிமுதல்

பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தில் நேற்று பேரணாம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த பூவரசன் (29), புவியரசன் (21) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாக்கெட்டுகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,330 கர்நாடக மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 13, 2025
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

வேலூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
வேலூர்: நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!

வேலூர், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற பெண்ணிடம், நெல்லையை சேர்ந்த இளைஞர் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆக.5ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் அடிப்படையில், அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று (டிச.12) காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த குற்றவாளி அஸ்வின் என்பவரை விசாரித்து, அவர் தான் என்பதை உறுதிசெய்து காட்பாடி போலீசார் கைது செய்தனர்.
News December 13, 2025
வேலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி!

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நேற்று (டிச.12) அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்றார். நேஷனல் சர்க்கிளில் இருந்து வேலூர் நோக்கி சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


