News April 14, 2024

வேலூர் அருகே விபத்து: பெண் பலி

image

செல்லியம்மன் கோயில் அருகே உள்ள சாமுவேல் நகர்ப குதியில்  பெண்கள் ஆட்டோ மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் நடந்த இச்சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News

News October 23, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 22, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News October 22, 2025

வேலூர்: நெல் நடவு இயந்திரங்கள் வழங்கிய எம்.பி

image

வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும்  வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!