News June 15, 2024

வேலூர் அருகே குடும்ப தகராறில் விபரீதம்

image

வேலூர் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகாந்த் – கீதா(31). கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று(ஜூன் 14) மீண்டும் தகராறு ஏற்படவே, விரக்தியடைந்த கீதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

வேலூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

வேலூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.<>com<<>>
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News March 1, 2026

வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

வேலூரில் குடிநீரே வழங்காமல் வரி வசூல்?

image

பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கவுன்சிலர்கள், ”ரூ.30 கோடியில் 3 ஆண்டாக நடந்து வந்த அம்ருத் திட்டப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. 1,13,14 ஆகிய வார்டுகளில் குடிநீர் வழங்காமலேயே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வரி வசூல் செய்து வருகிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!