News March 19, 2024
வேலூர் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு (மார்ச் 18) ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
Similar News
News August 8, 2025
வேலூர் SBI வங்கிகளில் வேலை…

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <
News August 8, 2025
BREAKING: வேலூரில் மிக கனமழை

வேலூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வேலூரில் இன்று (ஆகஸ்ட் 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவருக்கும் உடனே ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் நாளை அணைக்கட்டு வட்டாரத்திற்கு நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணியம்பாடி வட்டாடத்திற்கு வல்லம் குமரன் மஹால், கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு கீழ் ஆலத்தூர் ஜி.வி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்