News May 3, 2024
வேலூர் அருகே ஆட்டு சந்தையில் ரூ.10 லட்சம் வர்த்தகம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (மே 3) நடந்த சந்தையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவிலான ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 13, 2026
வேலூர்: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

வேலூர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று (பிப்.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடு [ ஈடுபடுத்தப்பட்ட பெங்களூருவை சேர்ந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இதையடுத்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தேவராஜ் (29) கைது செய்தனர்.
News February 13, 2026
வேலூரில் கூண்டோடு கைது!

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை ஒட்டி நேற்று (பிப்.12) வேலூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 185 பேரை போலீசார் கைது செய்தனர்.


