News September 9, 2025

வேலூர்: அரசு வேலை – நாளை கடைசி நாள்

image

வேலூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், தற்போது நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு நவ.15ம் தேதி நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

Similar News

News September 9, 2025

வேலூர்: B.E./B.Tech படித்திருந்தால் வேலை!

image

வேலூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 21.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News September 9, 2025

வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் செப்டம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

image

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (செப்.09) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!