News November 22, 2025
வேலூர்:மான் வேட்டையாடிய வாலிபர் கைது!

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினர் சோதனை நேற்று (நவ.21) நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்( 29) என்பவரது வீட்டில் மான் இறைச்சி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிவு ஆனந்த் கைது செய்தனர்.
Similar News
News November 27, 2025
வேலூர்: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

வேலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
வேலூர்: கடன் தொல்லையால் பெண் தூக்கு!

வேலூர், காட்பாடியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஜான்சி மேரி தனது 2 மகள்களின் உயர்கல்விக்காக கட்டணம் செலுத்த பலரிடம் கடன் வாங்கினார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, மேரியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால், மனஉளைச்சலில் இருந்த மேரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
வேலூர்: யுபிஎஸ்சி தேர்வு.. கலெக்டர் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, டிகேஎம் மகளிர் கல்லூரி ஆகிய 3 மையங்களில் 803 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் துணை ஆட்சியர் தலைமையில் 1 மொபைல் டீம், ஒவ்வொரு தேர்வுக்கூடத்துக்கு 5 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


