News December 29, 2025
வேலூர்:மது பாக்கெட் பதுக்கிய நபர் கைது!

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (35) வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது 90 மில்லி கொண்ட கர்நாடகா மாநில 20 பிராந்தி பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
வேலூர்: ஒரே ஆண்டில் ரூ.19 கோடி மோசடி!

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 3,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 519 மனுக்கள் பணம் இழப்பு இல்லாத மனுக்கள் ஆகும். மீதமுள்ள 2,631 பேர் ரூ.19 கோடியே 41 லட்சத்தை இழந்துள்ளனர். இதில் பல வங்கி கணக்குகளில் உள்ள 4 கோடியே 18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவு 10 முதல் காலை 6 மணி வரை வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News December 31, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூரில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவு 10 முதல் காலை 6 மணி வரை வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


