News November 1, 2025

வேலூர்:இன்று கிராம சபை கூட்டம்

image

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் இன்று நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 1, 2025

வேலூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

வேலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News November 1, 2025

வேலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

வேலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

வேலூர்: இழப்பீடாக ரூ.7.10 லட்சம் வழங்க உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (37), லாரி டிரைவர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வெங்கிலி அருகே ஏற்பட்ட விபத்தில் இளையராஜா படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதையடுத்து அவர் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி இசக்கியப்பன் இளையராஜாவுக்கு ரூ.7.10 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு நேற்று அக்.31 உத்தரவிட்டார்.

error: Content is protected !!