News February 6, 2026
வேலூருக்கு புதிய SP நியமனம்!

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை SP ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் சிவராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று (பிப்.6) பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News February 19, 2026
வேலூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
News February 19, 2026
வேலூரில் அதிகாரிகள் அதிரடி!

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


