News July 25, 2024

வேலூரில் 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

image

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 33 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 21, 2025

விஐடி பல்கலை.யுடன் இணைந்த முன்னணி நிறுவனம்

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஐஎம் நியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஆக.20) கையெழுத்தானது. விஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார், செயல் இயக்குநர் சந்தியாபென்ட ரெட்டி, துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

News August 21, 2025

வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) கண்காட்சி :

image

வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான உடல்கூறியல் கல்வி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சிஎம்சி உடல்கூறியல் துறை சார்பில் அறிவியல் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி ஆகஸ்ட் 22 வரை நடைபெறும். உதவும் உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார் .

News August 21, 2025

இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

image

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!