News December 1, 2024
வேலூரில் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்

வேலூர் மாநகராட்சி பகுதியில் மழையின் காரணமாக பல்வேறு மழைநீரால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதி கண்காணிக்கப்படுகிறது. மழை வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களை அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
வேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்ட பணியிடங்களுக்கு http://vellore.nic.in/notice.category/recruitment இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்
News August 14, 2025
மகளிர் உரிமை தொகை பெற? இங்கு போங்க

வேலூரில் இன்று (ஆகஸ்ட்.14) வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.<
News August 14, 2025
வேலூர் மாவட்ட SP எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.