News January 22, 2026

வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை!

image

பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதர்கான் (62). இவர் கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மனைவியுடன் சென்றார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தமபதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 12 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளி மற்றும் ரூ.4,500 திருடபட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

வேலூர்: சிறுமிக்கு மிரட்டல்; பாய்ந்த போக்சோ!

image

லத்தேரியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதை அறிந்த சிறுமி, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து காட்பாடி போலீசார் போக்சோ வழக்கில் சசிகுமாரை கைது செய்தனர்.

News January 30, 2026

வேலூர்: காதலி கண் முன்னே பற்றி எரிந்த காதலன்!

image

ஜாப்ராபேட்டையை சேர்ந்த வாலிபர் (25) அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.29) இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீரென தீக்குளித்தார். தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் அவர் அலறியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

வேலூர் போலீசாரை தாக்கிய நபர் கைது

image

வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று கஸ்பா வசந்தபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த தாமோதரன் மற்றும் 3 பேரை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது மது போதையில் இருந்த தாமோதரன் ஏட்டு பாலாஜியை தாக்கி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!