News November 4, 2025

வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது

image

பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.03) விருபாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஆந்திர சேர்ந்த சிட்டிபாபு (52), பாலகுமார் (55), சரவணன் (54) மற்றும் வெட்டுவாணத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52), கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரை போலீசார் வழக்கின் பெயரில் கைது செய்தனர்.

Similar News

News November 4, 2025

வேலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

image

வேலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 ) 2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 ) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 ) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 ) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

வேலூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

வேலூரில் துணை முதல்வர் பங்கேற்கும் விழா

image

வேலூர் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ.04) காலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் நேற்றிரவு விழா மேடை மற்றும் பாதுகாப்பு பணி குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!