News November 1, 2025
வேலூரில்: ரூ.4.77 லட்சத்திற்கு ஏலம்

வேலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களில் விதிமீறல் வழக்குகளில் பறிமுதல் செய்த 16 மோட்டார் சைக்கிள் நேற்று அக்.31 ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த ஏலம் ரூ.4,77,904 வரையில் உயர்ந்தது. ஏல நிகழ்வில் மதுவிலக்கு துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர். சட்டவிரோத மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற உத்தரவு பிறகு ஏலத்திற்கு விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 1, 2025
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 1, 2025
வேலூர் : இருசக்கர வாகனம் மோதி விபத்து!

வேலூர் மாவட்டம் மீன் மார்க்கெட் அருகே (அக்.31) நேற்று இரவு 9:00 அளவில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 1, 2025
வனப்பகுதியில் மண் சாலை அமைத்தவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்த விவகாரத்தில் இன்று (அக்.31) சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். வேலூர் வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் வன சரகர் சுப்பிரமணியன் தலைமையில் சைனகுண்டா காப்பு காடு பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ்குமாருக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது.


