News January 16, 2026
வேலூரில்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி துடிதுடித்து பலி!

கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ரயில்வே ஸ்டேஷனில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அகோர் மண்டி (60) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
வேலூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரன்!

இ.பி.கூட்ரோட்டில் சரவணவேல் என்பவரது உணவகத்தில் தேவேந்திரன் மற்றும் அரவிந்த் என்பவர்கள் சாப்பிட வந்தனர். அப்போது இவர்களுடன் ஏற்பட்ட தகராறில் சரவணவேல் கொதிக்கும் எண்ணெயை அரவிந்த் மீது ஊற்றி உள்ளார். இதனால் வலியால் துடித்த அரவிந்த், திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று (ஜன.30) குண்டர் சட்டத்தில் சரவணவேலை சிறையில் அடைத்தனர்.
News January 31, 2026
வேலூர் மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு விழா!

வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டும் விழா நேற்று (ஜன.30) நடைபெற்றது. இவ்விழாவில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 31, 2026
வேலூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!


