News August 24, 2024
வேலூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி ஓட்டேரி முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 25, 2026
வேலூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

வேலூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 25, 2026
வேலூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News February 25, 2026
வேலூர் மாவட்டத்தில் 82 மையங்கள் தயார்!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 142 பள்ளிகளை சேர்ந்த 7,134 மாணவர்கள், 8,522 மாணவிகள் என மொத்தம் 15,656 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை மையங்களை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


