News August 26, 2024
வேலூரில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சுப்போட்டி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக 25) நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் திண்டுக்கல் லியோனி, மேயர் சுஜாதா உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 9, 2025
வேலூரில் 3.5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் நேற்று (நவ.8) வரை 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்பட்டுள்ளது. என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 9, 2025
வேலூரில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 60வயது முதியவர் மயங்கி கிடப்பதாக நேற்று புகார் வந்துள்ளது. அதன் பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று முதியோரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.09) பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து. இறந்த முதல்வர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றன.
News November 9, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர், கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் நவம்பர் 11-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே கே.வி. குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளித்து தெரிவிக்கலாம் என தாசில்தார் பலராமன் தெரிவித்துள்ளார்.


